Saturday, November 9, 2013

தாரிக்

தாரிக்


தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை அருகே கத்தியால் குத்திக் கொன்ற 2 பேரை அதிரடியாக கைது செய்து, மதுக்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது என்பவர் மகன் முகமது தாரிக், 22. வேலடிப்பள்ளத்தில் சுடுகாட்டில் கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியளவில் நண்பர்களுடன் அமர்ந்து, முகமது தாரிக் பேசி கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மதுக்கூர் இந்திரா நகர், 3வது தெருவை சேர்ந்த நியாஸ் அகமது, 23, மைதீன், 33, தாவூத் ஷா, 25, ஆகிய மூவரும் சுடுகாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். மூவருக்கும், முகமது தாரிக்குக்கும் இடையே பேச்சுவார்த்தை வலுத்து, தகராறில் முடிந்தது.
இதில், முகமது தாரிக்கை மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தினர். உயிருக்கு போராடிய முகமது தாரிக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது தாரிக் இறந்தார்.
இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முகமது தாரிக் சடலம் கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மதுக்கூர் போலீஸார் வழக்குப்பதிந்து, நியாஸ் அகமது, மைதீன் ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இவ்வழக்கில், தலைமறைவாக உள்ள தாவூத் 

No comments:

Post a Comment