Friday, July 12, 2013
மதுக்கூர்
முர்சி பதவி இறக்கம்: பின்னணியில் அமெரிக்கா
2011 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் புரட்சிக்குப் பின்னர், தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை மக்கள் ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்;
முர்சி, ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரானார். கடந்தவாரம் நடந்த சதி புரட்சியினால் அதிபர் முர்சி, எகிப்து இராணுவத்தால் பதவி பறிக்கப்பட்டார்.
எட்டு தசாப்தத்திற்கு மேலாக சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியின்கீழ் அடிமை பட்டு கிடந்த எகிப்து மக்களுக்கு அதிபரான முர்சிக்கு, நிலைமையைச் சீராக்க முழுதாக இரு ஆண்டுகள்கூட அவகாசம் கொடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அதிபர் முர்சியை பதவி இறக்க இலட்சக்கணக்கானோர் போராடினார்கள்;
அதனாலேயே இராணுவம் தலையிட்டு அவரை நீக்கியது என்று நியாயம் பேசப்படுகிறது. அதிபர் முர்சிக்கு எதிராக வாக்களித்த அந்த 48% மக்களையும் ஒருமித்து போராட்ட களத்திற்குக் கொண்டுவந்தால், அது ஒரு பெரிய எண்ணிக்கையாகத்தான் இருக்கும். அதற்காக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி நீக்கலாமா? இதற்கு ஜனநாயகத்தில் இடமுள்ளதா என்ன?, இப்படியான அதிசயங்கள் மத்திய கிழக்கு நாடுகளில்தான் நடக்கும்.
2011 மார்ச் அரசியலமைப்பு வாக்கெடுப்பு
ஆதரித்தவர்கள் 77%
எதிரானவர்கள் 23%
மக்கள் சட்டசபைத் தேர்தல்
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 46%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%
ஷூறா சபை தேர்தல்
முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 58%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%
ஜனாதிபதி தேர்தல்
Subscribe to:
Posts (Atom)