Tuesday, August 20, 2013

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை

Photo: லண்டன்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வர அந்நாட்டின் எம்.பி.க்கள் சிலர் விடுத்த அழைப்புக்கு கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.லேபர் மற்றும் கன்ஸர்வேடிவ் கட்சியைச் சார்ந்த சில எம்.பி.க்கள் மோடியை, பிரிட்டனுக்கு வர விடுத்த அழைப்பு இந்தியாவில் தீவிரவாதம் வலுப்பெற உதவும் என்று கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் தலைவர் முனாஃப் ஸீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தெளிவுப்படுத்தி அவர் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் உள்துறை செயலாளர் தெரஸா மைக், இரு கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அவர்  கடிதத்தில் கூறியதாவது: பிரிட்டீஷ் அரசியலில் ஆபத்தான தவறுகளுக்கு இது
காரணமாகும். பிரிட்டனில் உள்ள தலைவர்களின் முட்டாள்தனமாக இதனை வரலாறு மதிப்பீடு செய்யும். அரசு மோடிக்கு விசாவை அனுமதித்தால் 1939ம் ஆண்டு ஹிட்லரை மகிழ்விக்க பிரதமர் சாம்பர்லைன் முயற்சித்தது போன்ற நடவடிக்கையாக
இது மாறும். மோடி ஆட்சியில் தொடர்ந்தால் ஹிந்து-முஸ்லிம் ஐக்கியம் சாத்தியமாகாது என்று இந்தியாவின் பிரிட்டன் தூதர் அரசுக்கு அனுப்பிய
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தகையதொரு நபரை பிரிட்டனுக்கு அழைப்பது நாட்டின் நம்பிக்கையை கெடுக்கும். மோடியை பா.ஜ.க.வின் மக்களவை தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக ஆக்கிய பிறகும் உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைந்துள்ளது என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.http://mathuhaimannar.blogspot.ae/
லண்டன்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பிரிட்டனுக்கு வர அந்நாட்டின் எம்.பி.க்கள் சிலர் விடுத்த அழைப்புக்கு கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.லேபர் மற்றும் கன்ஸர்வேடிவ் கட்சியைச் சார்ந்த சில எம்.பி.க்கள் மோடியை, பிரிட்டனுக்கு வர விடுத்த அழைப்பு இந்தியாவில் தீவிரவாதம் வலுப்பெற உதவும் என்று கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் தலைவர் முனாஃப் ஸீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தெளிவுப்படுத்தி அவர் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் உள்துறை செயலாளர் தெரஸா மைக், இரு கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
அவர் கடிதத்தில் கூறியதாவது: பிரிட்டீஷ் அரசியலில் ஆபத்தான தவறுகளுக்கு இது
காரணமாகும். பிரிட்டனில் உள்ள தலைவர்களின் முட்டாள்தனமாக இதனை வரலாறு மதிப்பீடு செய்யும். அரசு மோடிக்கு விசாவை அனுமதித்தால் 1939ம் ஆண்டு ஹிட்லரை மகிழ்விக்க பிரதமர் சாம்பர்லைன் முயற்சித்தது போன்ற நடவடிக்கையாக
இது மாறும். மோடி ஆட்சியில் தொடர்ந்தால் ஹிந்து-முஸ்லிம் ஐக்கியம் சாத்தியமாகாது என்று இந்தியாவின் பிரிட்டன் தூதர் அரசுக்கு அனுப்பிய
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தகையதொரு நபரை பிரிட்டனுக்கு அழைப்பது நாட்டின் நம்பிக்கையை கெடுக்கும். மோடியை பா.ஜ.க.வின் மக்களவை தேர்தல் பிரச்சாரக் கமிட்டியின் தலைவராக ஆக்கிய பிறகும் உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைந்துள்ளது என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.http://mathuhaimannar.blogspot.ae/

No comments:

Post a Comment