Monday, August 19, 2013

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...


பேராசியர் DR.அப்துல்லாஹ் என்கிற பெரியார் தாசன் அவர்கள் இன்று (19/8/2013) 1.23 A.M மரணம் அடைந்தார்கள் , அவரின் உடலை முஸ்லிம்கள் இஸ்லாமிய முறை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது அவரது மகன் சகோதரர் வளவன் அவர்கள் மறுத்து விட்டார் ,மேலும் அவர் பேராசிரியர் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லுரிக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் இறுதியாக கோரிக்கை வைத்தததால் ,அவருடைய இறுதி ஆசை படியே அவரது உடலை மருத்துவ கல்லுரிக்கு கொடுத்துவிடுவதாக அறிவித்தார்,மேலும் முஸ்லீம்கள் தரப்பில் ஜனாஸா தொழகை நடத்துவோம் என்ற பொழுது சம்மதம் தெரிவித்தார் ,அதன் அடிப்டையில் நாளை அவரது ஜனாஸா தொழுகை எங்கு நடத்துவது என்று இஸ்லாமிய இயகங்கள் நாளை ஓன்று கூடி முடிவு எடுக்கும் இன்ஷா அல்லாஹு ,அன்னாரது பாவங்கள் அனைத்தும் அல்லாஹுவால் மன்னிக்க பட்டு நாளை மறுமையில் வெற்றி பெற்றிட துஆ செய்யவும்...

யா அல்லாஹ்!
இவர்களின் பாவங்களை மன்னித்து, மறுமையில் சிறந்த இடத்தை கொடுப்பாயாக.
யா அல்லாஹ்!
நபிகார்கள், சுகதாக்கள், சிதீக்கீன்கள் மற்றும் சிறந்த இறை அடியார்களுடன் இவர்களையும் ஆக்கி வைப்பாயாக.

ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்....

No comments:

Post a Comment